நான் அப்படி இருந்தா தைரியமாக சொல்வேன்! சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்!

suchitra karthik kumar

சென்னை : பாடகி சுசித்ராவுக்கு கார்த்திக் குமார் வீடியோ வெளியீட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல பாடகியான சுசித்ரா ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் பற்றியும் பேசியது பேசும்பொருள் ஆகி இருக்கிறது. பேட்டியில் பேசி இருந்த பாடகி சுசித்ரா ” கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷும் ஆரம்ப காலத்தில் ஒன்றாக பழகி வந்த சமயத்தில் ஒரே ரூமுக்குள் செல்வார்கள்.

அங்கு என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரியும் எனவும்” வெளிப்படையாகவே பேசி இருந்தார்.  இவர் பேசி இருந்தது கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் சுசித்ராவை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சுசித்ரா பேசியதற்கு வீடியோ வெளியீட்டு கார்த்திக் குமார் பதிலடி கொடுத்துள்ளார். வீடியோவில் பேசிய கார்த்திக் குமார் ” நான் உண்மையில் ஓரின சேர்க்கையாளராக இருந்தேன் என்றால் அதனை வெளியில் சொல்வதில் கூச்சம்படவே மாட்டேன். அப்படி இருந்தால் நான் தைரியமாக நான் சொல்வேன்.

ஏனென்றால், அதை பெருமையாகவே தான் நினைப்பேன். ஆனால், நான் அப்படி இல்லை.  நகரங்களில்ஓரினசேர்கையாளர்களுக்காக நடக்கும் அனைத்து முன்னெடுப்புகளிலும் எங்கே நடந்தாலும் நான் கலந்து கொள்வேன். ஆனால், அதற்காக நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருக்க வேண்டும் என்பது இல்லை. அவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவராக இருந்தால் போதும்.  இது அவமானம் எதுவும் இல்லை பெருமை என்று தான் நான் சொல்வேன்” என்று கார்த்திக் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்