lingusamy karthi [FILE IMAGE]
Karthi : பையா படத்தை தொடர்ந்து லிங்கு சாமி கூறிய கதையில் கார்த்தி நடிக்க மறுத்துள்ளார்.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘பையா’. இந்த திரைப்படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட்டானது.இதன் காரணமாகவே இந்த திரைப்படத்தை சமீபத்தில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனது.
அந்த அளவிற்கு ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்து வருகிறது பையா திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லிங்குசாமி நடிகர் கார்த்தியிடம் பையா படத்திற்கு பிறகு கூறிய கதை குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
பையா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை சந்தித்து லிங்குசாமி மீண்டும் ஒரு கதையை கூறினாராம். அந்த கதையில் தமன்னா தான் ஹீரோயினாகவும் நடிக்க இருந்தாராம். ஆனால் அந்த கதையை கேட்டவுடன் நடிகர் கார்த்தி எனக்கு இப்போது திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன. இந்த சமயத்தில் நான் இப்படியான இளமையான கதாபாத்திரத்தில் நடித்தால் சரியாக வருமா? என எனக்கு பயமாக இருக்கிறது.
இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நான் நடித்தால் எப்படி சரியாக இருக்கும் என்று கார்த்தி கேட்டாராம் அவர் கேட்டதும் லிங்குசாமிக்கு சற்று நியாயமாகப்பட்டதாம். உடனடியாக வேறு கதையை எழுதிவிட்டு வருகிறேன் ஆனால் பையா படத்தில் நடித்தது போல நீங்கள் இருவரும் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று இங்கு சாமி கூறி இருக்கிறாராம்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…