பிரபல இயக்குனருடன் இணையும் கார்த்தி.!?

Published by
பால முருகன்

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் “சர்தார்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இவரது நடிப்பில் ஏற்கனவே  “பொன்னியின் செல்வன்”, “விருமன்” ஆகிய படங்கள் ரிலீஸ் -ஆக தயாராகவுள்ளது.

இதில் விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதியும், சர்தார் படம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு கார்த்தி நடித்த 3 படங்கள் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதில் சர்தார் படத்தை முடித்துவிட்டு கார்த்தி எந்த இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. அந்த வகையில், தற்போது அதற்கான புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அது என்னவென்றால், நடிகர் கார்த்தி அடுத்ததாக தமிழ் சினிமாவில், கனா, நெஞ்சிக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டு இந்த படம் உருவாகவுள்ளதாம்.

இந்திய அளவில் பெரிய பட்ஜெட் படமாக இந்த படம் இருக்குமாம் வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தையும் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago