சினிமா

என்னை விட கார்த்தி தான் சிறந்தவன்! மேடையில் மனம் திறந்து தம்பியை பாராட்டிய சூர்யா!

Published by
பால முருகன்

நடிகர் கார்த்தி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தான் நடிகர் கார்த்தியின் 25-வது திரைப்படம். இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

கார்த்தியின் 25-வது படத்திற்கான விழா என்ற காரணத்தால் இந்த விழாவில் சூர்யா, யுவன் சங்கர் ராஜா, சிறுத்தை சிவா, எச். வினோத், லோகேஷ் கனகராஜ், சந்தோஷ் நாராயணன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அப்போது மேடையில் பேசிய நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தியை பாராட்டி பேசினார்.

மேடையில் பேசிய அவர் ” ஒரு 20 வருடங்களுக்கு முன்பு கமல் அண்ணன் கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் படத்தை தொடங்க பூஜை போட்டு கொடுத்தார். அந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சார் கார்த்தியையும் எங்களையும் பாராட்டினார். இந்த மேடையில் கார்த்தியின் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு அது தான் நியாபகம் வருகிறது.

இந்த தீபாவளி சரவெடி தான்…கலகலப்பாக கலக்கும் கார்த்தியின் ‘ஜப்பான்’ பட டிரைலர்!

கார்த்தியின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணம் யார் என்றால் ஞானவேல் ராஜாதான். நானும் கார்த்தியும் ரொம்ப கஷ்டப்பட்ட காலத்தில் பேசாமல் பன்னிகுட்டியை மேய்க்கலாம் என்று கூட பேசி இருக்கிறோம். ஆனால், அந்த சமயம் எல்லாம் எங்களுக்கு நல்ல கதைகளை தேர்வு செய்ய வைத்து வெற்றிபெற வைத்தவர் அவர் தான். என்னிடம் பலர் கூறுவார்கள் நான் உங்களுடைய தம்பி கார்த்தியின் பெரிய ரசிகர் என்று அதெல்லாம் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

கார்த்தி என்னை விட சினிமாவில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அதைப்போல என்னை விட சினிமாவுக்கு அதிகம் ஆர்வம் கொடுப்பது அவர் தான். கார்த்தி சினிமாவிற்குள் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் நினைத்து இருந்தால் இப்போது எத்தனையோ படங்களில் நடித்திருக்கலாம். ஆனால், வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் வேறு பாணி கார்த்தி வேறு பாணி.

என்னிடம் சில கதைகள் வரும் குறிப்பாக கைலியை கட்டுவது, மது அருந்துவது போன்ற கதாபாத்திரங்கள் வந்தால் அதனை அப்படியே கதை நன்றாக இருக்கு இந்த கதையை நீங்கள் கார்த்தி கிட்ட சொல்லுங்கள் என்று அவரிடம் அனுப்பிவிடுவேன். ஆனால், இதல்லாம் மாற்றியது லோகேஷ் கனகராஜ் தான். ஏனென்றால், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் மூலம் எனக்கு வேறொரு பரிமாணத்தை கொடுத்தார்.

நான் உண்மையாகவே சொல்கிறேன் என்னைவிட எல்லாவற்றிலும் என்னுடைய தம்பி கார்த்தி சிறந்தவன். என்னை விட குடும்பத்திற்கு அதிக நேரம் செலவிடுவான். அது மட்டுமில்லை எங்களுடைய அப்பா – அம்மாவை அழைத்துக் கொண்டு ஒரு வருஷத்திற்கு 2 முறையாவது வெளிநாட்டுக்கு சுற்றுல்லா அழைத்து சென்றுவிடுவான்” எனவும் நடிகர் சூர்யா தனது தம்பியை பற்றி மனம் திறந்து பாராட்டி பேசி உள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

2 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

3 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

4 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

5 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

8 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

9 hours ago