சினிமா

என்னது குஷ்பு -பிரபு ரகசிய திருமணமா? பரபரப்பை கிளப்பிய பிரபலம்!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் தர்மத்தின் தலைவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பு . இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து வருஷம் 16,தாலாட்டு படவா, சின்ன தம்பி, அண்ணாமலை என பல ஹிட் படங்களில் நடித்து 80,90 ஆகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக அந்த காலத்திலேயே நடித்துவிட்டார்.

அந்த காலத்தில் குஷ்பு நடிகர் பிரபுவுடன் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக தர்மத்தின் தலைவன், மறவன், உத்தம ராசா, சின்ன வாத்தியார் ஆகிய படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. பொதுவாக ஒரு ஹீரோ ஹீரோயின் தொடர்ச்சியாக படங்களில் நடித்தாலே அவர்களை பற்றிய வதந்தி தகவல் பரவிவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

அப்படி தான் குஷ்பு நடிகர் பிரபுவுடன் தொடர்ச்சியாக படங்களில் இணைந்து நடித்த காரணத்தால் இவர்களுக்குள் அந்த சமயம் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் பரவியது. பெரிய பத்திரிகை நிறுவனமே இதனை தலைப்பு செய்தியாக எழுதியதாம். இந்த தகவலை சினிமாவை பற்றி பேசி யூடியூபில் பிரபலமான டாக்டர்  கந்தராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

மக்கள் ரசிக்காங்க அதான் அப்படி பட்ட படங்களில் இறங்கிட்டேன்! ஹன்சிகா ஓபன் டாக்!

இது குறித்து பேசிய கந்தராஜ் ” குஷ்பு ஹிட் படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் அவருக்கு இருந்த ஆண் ரசிகர்கள் கூட்டம் போல வேறு எந்த நடிகைகளுக்கும் இருக்காது. அந்த அளவுக்கு அவருக்கு கோவிலே கட்டும் அளவிற்கு அவர் மீது ரசிகர்கள் வெறி பிடித்து இருந்தார்கள். நாங்கள் அந்த காலத்தில் தலைப்பு செய்திகளில் பார்த்த விஷயம் குஷ்பூ – பிரபு காதல் என்பது.

இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள் அந்த சமயம் பத்திரிகையில் காதல் என்று கூட வராது. இருவருக்கும் திருமணம் என்று தான் வரும். அப்போது இருவரும் இருக்கும் புகைப்படங்கள் கூட வெளியாகி பெரிய பிரச்னையே ஏற்பட்டது. ஆனால், அந்த சமயம் ஏற்கனவே பிரபுவுக்கு திருமணம் முடிந்து குழந்தைகளும் இருந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த திருமணத்திற்கு பிரபுவின் முதல் மனைவியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும்  செய்திகளை பார்த்திருக்கிறேன்.

இதற்கு மேல் இந்த விஷயத்தை பற்றி பேசவே முடியாது ஏனென்றால், இது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் இருவருக்கும் குடும்பம் இருக்கிறது. நான் நானாக எந்த விஷயத்தையும் சொல்லவில்லை அந்த சமயம் இந்த மாதிரி தகவல் வந்தது இதனை தான் நான் சொன்னேன்” எனவும்  கந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.!

சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…

46 minutes ago

கிரிக்கெட்டில் எது சிறந்த அணி? இந்தியாவா? பாகிஸ்தானா? – பிரதமர் மோடி பதில்.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின்  பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…

1 hour ago

“திமுக போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…

2 hours ago

தமிழ்நாடு சட்டப்பேரவை: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…

3 hours ago

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

15 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

17 hours ago