Categories: சினிமா

கேப்டன் கிட்ட இருந்து அந்த விஷயத்தை கற்றுக்கொள்ளலாம் – கமல்ஹாசன்!

Published by
பால முருகன்

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவு தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நேற்று ஜனவரி ( 19) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அழைக்கப்பட்டு இருந்தார்கள். இந்த இரங்கல் கூட்டத்திற்கு விஷால், ராதா ரவி, மன்சூர் அலிகான், சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர் , கமல்ஹாசன், கருணாஸ், ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.

இதில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியதாவது ” விஜயகாந்த் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் நானும் அவரும் ஒருமுறை சந்தித்து பேசினோம். அந்த சமயம் அவர் என்னிடம் எப்படி பாசத்தோடு பழகினாரோ அதே போல தான் பெரிய நடிகராக வளர்ந்த பிறகும் பழகினார். அவருடைய எண்ணமே ஒரு நல்ல நிலைமைக்கு வரவேண்டும் தான் பட்ட அவமானங்கள் வேறு யாருக்கும் வந்துவிட கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்.

கேப்டனை நினைத்து வடிவேலு அழுதிருப்பார்! சரத்குமார் பேச்சு!

விஜயகாந்த் அவருடைய குரல் மற்றவர்களுக்காக போராடும் குரல். சினிமா துறையில் இருக்கும்போது நடிகர்களுக்காக குரல் கொடுத்தார். அதைப்போல அரசியலில் அவர் வருகை தந்த பின் பெரிய தலைவர்களுக்கெல்லாம் வரும் கூட்டம் இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். தனிப்பட்ட முறையை அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

அதில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால், அவருடைய கோபத்தை தான் நான் சொல்வேன். அவருடைய கோபம் நியாயமான கோபமாக இருக்கும். அவருடைய நியாமான அந்த கோபங்கள் நடிகர் சங்கத்துக்கும் உதவி செய்து இருப்பதாக நான் நினைக்கிறேன். கேப்டன் விஜயகாந்திற்கு ஒரு தைரியம் உண்டு. அது என்னவென்றால், தனக்கு பிடிக்காதவர்களைக்கூட அழைத்து பேசும் தைரியம் தான். அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.

அதில் முக்கியமாக நான் மேலே குறிப்பிட்டு சொன்னது போல அந்த மாதிரியான குணாதியசங்களை பின்பற்றலாம். அவர் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்” எனவும் சற்று கண்கலங்கியவாறு கமல்ஹாசன் விஜயகாந்த் பற்றி பேசினார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago