சினிமா

கண்ணீரும் காயங்களும் உண்மை தான்! நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வேதனை!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் ஹீரோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தமிழில் ஹீரோ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஹீரோ படத்தை தொடர்ந்து சிம்புவிற்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு மாநாடு படம் தமிழில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மாநாடு வெற்றியை தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தற்போது ஜீனி, அதைப்போல மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் மலையாளத்தில் நடித்திருந்த ஆண்டனி படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இதுவரை இல்லாத அளவிற்கு பாக்ஸர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.  ஆண்டனி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்ட வலிகள் குறித்து சற்று எமோஷனலாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த படத்திற்காக மக்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

எனக்கு சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

இந்த படத்தில் நடிப்பதற்காக நான் மூன்று வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் நான்கு மணி நேரம் கிக் பாக்ஸிங் பயிற்சி  செய்து பழகினேன். இப்படி பாக்ஸர் ஆக நான் இந்த திரைப்படத்தில் நடித்து வந்த காரணத்தால் அதற்காக கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. கடுமையாக பயிற்சியும் எடுத்தேன். அப்படி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது தான் எனக்கு காயம் ஏற்பட்டது .

கை கால்கள் உணர்ச்சிகள் இல்லாதது போல இருந்தது. அந்த காயங்கள் எல்லாம் எனக்கு கண்ணீரை வரவழைத்தது. காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் எல்லாம் உண்மை தான். எப்படியோ ஒரு வழியாக இரண்டு நாட்களுக்கு பிறகு எனக்கு காயங்கள் எல்லாம் சரி ஆகிவிட்டது. காயம் ஏற்பட்ட காரணத்தால் என்னால் இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை” எனவும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் கல்யாணி பிரியதர்ஷன் சீனி படத்தில் நடித்து வருவதை போல மைக்கில் பாத்திமா எனும் மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago