சினிமா

கண்ணீரும் காயங்களும் உண்மை தான்! நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வேதனை!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் ஹீரோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தமிழில் ஹீரோ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஹீரோ படத்தை தொடர்ந்து சிம்புவிற்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு மாநாடு படம் தமிழில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மாநாடு வெற்றியை தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தற்போது ஜீனி, அதைப்போல மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் மலையாளத்தில் நடித்திருந்த ஆண்டனி படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இதுவரை இல்லாத அளவிற்கு பாக்ஸர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.  ஆண்டனி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்ட வலிகள் குறித்து சற்று எமோஷனலாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த படத்திற்காக மக்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

எனக்கு சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

இந்த படத்தில் நடிப்பதற்காக நான் மூன்று வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் நான்கு மணி நேரம் கிக் பாக்ஸிங் பயிற்சி  செய்து பழகினேன். இப்படி பாக்ஸர் ஆக நான் இந்த திரைப்படத்தில் நடித்து வந்த காரணத்தால் அதற்காக கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. கடுமையாக பயிற்சியும் எடுத்தேன். அப்படி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது தான் எனக்கு காயம் ஏற்பட்டது .

கை கால்கள் உணர்ச்சிகள் இல்லாதது போல இருந்தது. அந்த காயங்கள் எல்லாம் எனக்கு கண்ணீரை வரவழைத்தது. காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் எல்லாம் உண்மை தான். எப்படியோ ஒரு வழியாக இரண்டு நாட்களுக்கு பிறகு எனக்கு காயங்கள் எல்லாம் சரி ஆகிவிட்டது. காயம் ஏற்பட்ட காரணத்தால் என்னால் இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை” எனவும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் கல்யாணி பிரியதர்ஷன் சீனி படத்தில் நடித்து வருவதை போல மைக்கில் பாத்திமா எனும் மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

8 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

8 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

10 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

12 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

12 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

13 hours ago