சென்னை: ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 31 படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவிப்பு.
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் நடிக்கவிருக்கும் 31வது படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவித்துள்ளது.
கேஜிஎஃப் மற்றும் சாலார் போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். ஏற்கனவே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தேவாரா’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில், ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆரின் அடுத்த பட அப்டேட் வெளியாகி டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. படம் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், ஜூனியர் என்டிஆர் தனது வரவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘தேவாரா பாகம் 1’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தில் சைஃப் அலிகான், ஜான்வி கபூர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தப் படத்தின் முதல் பாகம் கடலோர நிலங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…