jigarthanda 2 [File Image]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என்ற பெயரில் அதனுடைய இரண்டாவது பாகத்தை எடுத்துள்ளார்.
இரண்டாவது பாகமாக இருந்தாலும், அந்த கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை அதனுடைய தொடர்ச்சியான பாகமும் இல்லை. ஒரு தனி கதையாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சனத்தை வைத்து பார்க்கையில், இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு படம் முதல் பாகத்தை மிஞ்சுவிட்டதாகவே பலரும் கூறி வருகிறார்கள்.
இதுதான் சினிமா! ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் படத்தை நன்றாக விளம்பரப்படுத்தி இருப்பதன் காரணமாக அங்கு 1 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்புகள் இருக்கிறதாம். அதைப்போல, படம் உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் 7 கோடி வரை வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாம். இந்த தகவலை வர்த்தக ஆய்வாளர் சித்தார்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…