jigarthanda double x collection [File Image]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தின் முதல் பாகத்தை போல இரண்டாவது பாகமமம் அருமையாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில்பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று இன்றுடன் 5வது நாட்களாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் ஷீன் டாம் சாக்கோ, நிமிஷா சஜ்ரியன், விது உள்ளிட்ட பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், கண்டிப்பா அதனை தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் 4 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் படத்தை மிஞ்சியதா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ? முதல் நாள் வசூல் விவரம் இதோ
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
அந்த தகவலின்படி, முதல் நாளில் உலகம் முழுவதும் 1.75 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதற்கு அடுத்த நாளான இரண்டாம் நாளில் ரூ.5.21 கோடி வசூலித்துள்ளது. மூன்றாம் நாளில் ரூ.7.4 கோடி வசூலித்திருக்கும் நிலையில், 4வது நாளான நேற்று மட்டும் ரூ.7.10 வசூலித்திருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் இதுவரை (4 நாளில்) ரூ.22 கோடியை தாண்டியுள்ளது என்றும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் 30 கோடியை எட்டிருக்கும் என கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…