rajinikanth vijay sethupathi [File Image]
நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் அடுத்ததாக ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு வில்லனாக ஏற்கனவே விஜய்சேதுபதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில், பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த தலைவர் 171 திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கல்யாண செலவுக்கு கஷ்டப்பட்ட பொன்னம்பலம்! கேப்டன் செய்த பெரிய உதவி!
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தலைவர் 171 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வேளைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் பிஸியாக இருக்கிறார்.
எனவே, இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் சேதுபதி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் இனிமேல் தான் வில்லனாக நடிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார். எனவே, தலைவர் 171 படத்தில் எப்படி வில்லனாக நடிப்பார் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…