சினிமா

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த சஞ்சய் பட பூஜை! மகனுக்காக கலந்துகொள்ளாத விஜய்?

Published by
பால முருகன்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக விருக்கிறார். அவர் இயக்குனராக அறிமுகமாகும் அந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் முன்னதாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், அவர் எந்த ஹீரோவை வைத்து படம் எடுக்க போகிறார் படத்தில் யாரெல்லாம் பணியாற்ற போகிறாரார்கள் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

வெறுமனையாக படத்தை சஞ்சய் இயக்குகிறார். அந்த படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்று மட்டும் தான் லைக்கா அறிவித்து இருந்தது. பிறகு இந்த திரைப்படத்தில் ஹீரோவாக துருவ் விக்ரம் நடிக்கிறார், கவின் ஹீரோவாக நடிக்கிறார், விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார் என பல தகவல்கள் பரவியது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மக்கள் ரசிக்காங்க அதான் அப்படி பட்ட படங்களில் இறங்கிட்டேன்! ஹன்சிகா ஓபன் டாக்!

இதனையடுத்து, ஜேசன் சஞ்சய்  இயக்கும் இந்த படத்திற்கான பூஜை நேற்று சத்தம் இல்லாமல் சென்னையில் நடைபெற்றதாம். கிட்டத்தட்ட காலை 9 மணி அளவில் லைக்கா உரிமையாளர்கள், ஜேசன் சஞ்சய் இன்னும் சில பிரபலங்கள் மட்டும் தான் அந்த பூஜையில் கலந்து கொண்டார்களாம். நடிகர் விஜய் இந்த பூஜையில் கலந்துகொள்ளவில்லையாம்.

அதற்கு காரணமே விஜய் வந்தால் அவரால் இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு விடும் புகைப்படம் மிகவும் வைரலாகி விட்டால் விஜய்யால் வைரலாகி விட்டது என்ற பேச்சு வந்துவிட கூடாது என விஜய் வரவில்லையாம். அது மட்டுமின்றி, தன்னால் தன்னுடைய மகன் வளர்ச்சி இருக்க கூடாது அவருடைய முயற்சியால் வரவேண்டும் என்று விரும்புகிறாராம்.

இந்த காரணத்துக்காக தான் சஞ்சய் படம் அறிவிக்கும் போது கூட அவர் எதுவுமே சொல்லாமல் இருந்தாராம். இதன் காரணமாக தான் அவர் தன்னுடைய மகன் இயக்கும் முதல் படத்தின் பூஜைக்கு கூட வராமல் இருந்தாராம். இந்த தகவலை சினிமா தகவலை தெரிவிக்கும் பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.  மேலும், ஜேசன் இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே “trigger” எனும் சிறிய குறும்படம் ஒன்றையும் இயக்கி இருந்தார். அந்த குறும்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது ஒரு திரைப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

6 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

28 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

32 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

46 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

58 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago