Categories: சினிமா

ஆஹா! 500 கோடி பட்ஜெட்டில் சூர்யாவின் புதுப்படம்?

Published by
பால முருகன்

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது.படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

இந்த திரைப்படம் இந்த ஆண்டு பிரமாண்டமாக 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவும் உள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 43-வது படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதன்பின் வாடிவாசல் படத்தையும்  கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த திரைப்படங்களை எல்லாம் முடித்துவிட்டு நடிகர் சூர்யா அடுத்ததாக 500 கோடி பட்ஜெட்டில் ஒரு புதுதிரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த திரைப்படத்தினை பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாகாபாரதம் கதையம்சத்தை வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

கேப்டன் மில்லர் வசூல் எவ்வளவு தெரியுமா?

எனவே, மாகாபாரதம் வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டால் கண்டிப்பாக 500 கோடி பட்ஜெட் செலவாகும். இதன் காரணமாக பாண் இந்தியா அளவில் இந்த திரைப்படத்தை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

புகைப்படங்களை வெளியீட்டு தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள ஜான்வி கபூருக்கு தமிழிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. எனவே, அவர் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் அறிமுகம் ஆகவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

29 minutes ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

53 minutes ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

1 hour ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

12 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

13 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

14 hours ago