Rathnam box office [file image]
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக விஷால் மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், இந்த ரத்னம் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே கூறலாம். ஆனால், எதிர்பார்ப்பை முழுவதுமாக இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம்.
படம் பார்த்த பலரும் படம் சுமாராக இருப்பதாகவே கூறி வருகிறார்கள். விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படத்திற்கு வெளியானதில் இருந்து இப்போது வரை கலவையான விமர்சனங்கள் மட்டுமே பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூலும் சற்று எதிர்பார்த்த அளவிற்கு பெறவில்லை என்றே கூறவேண்டும்.
அந்த வகையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 3.57 கோடி வசூல் செய்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து படம் வெளியான நாளில் இருந்து மொத்தமாக 5 நாட்கள் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை படத்திற்கு வசூல் ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம்.
அதன்படி, சனிக்கிழமை 4.05 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 3 கோடியும், திங்கள் கிழமை 1.83 கோடி என மொத்தமாக இந்த படம் வெளியான நாளில் இருந்து 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…