பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் வாங்கல! சூரி படத்திற்கு வந்த சோதனை!

Published by
பால முருகன்

Garudan காமெடி நடிகராக கலக்கி வந்த நடிகர் சூரி  சமீபகாலமாக ஹீரோவாகவும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த விடுதலை திரைப்படத்தில் கூட நடிகர் சூரி ஹீரோவாக நடித்து இருந்தார். படமும் விமர்சன ரீதியாக பெரிய அளவில் மக்களுக்கு மத்தியில் வெற்றி அடைந்தது.

READ MORE- அவனை போக சொல்லு..’இல்லனா நடிக்க மாட்டேன்’! வடிவேலு மோசமான செயல்?

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகத்திலும் நடிகர் சூரி நடித்து முடித்துள்ளார். ஆனால், இந்த இரண்டாவது பாகத்தில் அவருடைய கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதி உடைய கதாபாத்திரம் தான் நிறைய காட்சிகளில் இடம்பெறும் என தெரிகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூரி கருடன் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான துரைசெந்தில் குமார் இயக்கி இருக்கிறார். படத்தில் உன்னி முகுந்தன், சசிகுமார், ரேவதி ஷர்மா, சசிவதா, ரோஷினி ஹரிப்ரியம், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், சுமா ராஜேந்திரன் & பரகிதா  உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

READ MORE-நம்பி ஏமாந்துட்டேன்! ‘வாழ்க்கை போச்சு’… நடிகை கிரண் வேதனை!

படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தில் இருந்து சின்ன டீசர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.  படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துள்ளனர். முன்னதாக படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்பிறகு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.  இந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்வது எதற்காக என்ற காரணம் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படம் எனவே படத்தின் பட்ஜெட்டுக்கு பாதி கோடியாவது ஓடிடி உரிமையில்  விற்பனை செய்ய வேண்டும் என்ற முனைப்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறதாம்.

READ MORE- என்னோட சந்தோஷம் எல்லாம் போச்சு! கதறிய சிம்ரன்? வெளியான சீக்ரெட்!

எனவே பல ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றிருக்கிறது. ஆனால் எந்த ஓடிடி  நிறுவனமும் இந்த கருடன் திரைப்படத்தை வாங்க முன்வரவில்லை. இதன் காரணமாக தான் படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் முடிவு செய்யாமல் படக்குழு இருக்கிறதாம்.  எனவே படத்தின் ஓடிடி  உரிமையை நிறுவனம் வாங்கிய பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

13 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

13 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

14 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago