பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை மிருணால் தாக்கூர். இவர் சீதா ராமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார் என்றே கூறலாம். இந்நிலையில், இந்த பாலிவுட் அழகிக்கு தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னென்ன திரைப்படங்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது தனது 48-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. போஸ்டரில் சிம்பு மிரட்டலான கெட்டப்பில் இருந்தார்.
சாய் பல்லவி நடிக்க மறுத்த தமிழ் படங்கள்! இந்த லிஸ்டில் லியோவும் இருக்கே!!
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் எந்த பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வரவில்லை இதனையடுத்து, படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மிருணால் தாக்கூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 23-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கவும் மிருணால் தாக்கூரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சூர்யாவுக்கு இணையாக சண்டை போடும் திஷா பதானி! கங்குவா படத்தின் லேட்டஸ்ட் தகவல்!
இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிக்க நடிகை மிருணால் தாக்கூர் சம்மதம் தெரிவித்துவிட்டால் கண்டிப்பாக அவருக்கு தமிழ் சினிமாவிலும் அடுத்ததாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…