நாயகன் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு (Thug Life) தக்லைஃப் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு ‘தக்லைஃப்’ முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
ஆஸ்கர் விருது : 13 பிரிவுகளில் தேர்வான ஓப்பன்ஹெய்மர்!
இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம் என ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக “Thug Life” படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…