சினிமா

இசையமைப்பாளர் டி.இமான் இவ்வளவு நல்ல மனிதரா? குட்டி பத்மினி சொன்ன தகவலை கேட்டு கண்கலங்கும் ரசிகர்கள்!

Published by
பால முருகன்

இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு திரைப்படம் கூட பணியாற்றமாட்டேன் என தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார். இதனை பார்த்த பலரும் இருவரும் அண்ணன் -தம்பி போல பழகி வந்தவர்கள் இருவருக்கும் இடையே திடீரென என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வந்தனர். ஒரு பக்கம் டி.இமான் விவாகரத்து பற்றி தான் சிவகார்த்திகேயனுக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தி இருக்கும் என கூறிவந்தனர்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், இசையமைப்பாளர் டி.இமானின் முதல் மனைவி மோனிகா பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதர் நானும் இமானும் பிரிய கூடாது என்று அவர் விரும்பினார். உண்மையில் சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதர் டி.இமான் பட வாய்ப்புகள் இப்போது இல்லாத காரணத்தால் இமான் சிவகார்த்திகேயன் பற்றி இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணவே மாட்டேன்! இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு!

எனவே, இமான் விவாகரத்து விஷயத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது தெரிய வந்தது. இமானும் இதனை வெளிப்படையாக சொல்லாமல் சிவகார்த்திகேயன் துரோகம் செய்ததாகவும், அதனை வெளிப்படையாக கூறமுடியாது எனவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நடிகை குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் இமானை மோனிகா சரியாக புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” இமான் – மோனிகா இருவரும் விவாகரத்து செய்துகொண்ட பிறகு இமான் என்னிடம் எனக்கு திருமணம் ஆகாத பெண் வேண்டாம். ஒரு பெண் குழந்தையோடு இருக்கும் பெண் தான் எனக்கு வேணும் நான் அவரை திருமணம் செய்துகொள்வேன். அந்த மாதிரி எதாவது பெண் இருந்தால் சொல்லுங்கள் ஏனென்றால், எனக்கு இரண்டு பெண் குழந்தைகளாக நான் பார்க்க போகிறேன்.

அண்ணா தெரியாம பண்ணிட்டேன்! இமானுக்கு கால் செய்து கெஞ்சிய சிவகார்த்திகேயன்?

எனக்கு 2 பெண் குழந்தைகள் இரண்டு கண்கள் மாதிரி நான் தனியாக இருப்பதால் தனிமையாக இருப்பதாக உணர்கிறேன். வீட்டில் குழந்தைகள் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்பதால் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. எனவே, எனக்கு பெண் குழந்தை கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என இமான் கூறினாராம். அது மட்டுமின்றி சம்பாதிக்கும் சொத்தில் 3 பெண் குழந்தைகளுக்கும் பிரித்து கொடுக்கவும் முடிவு எடுத்துள்ளாராம்.

மேலும், இமானை மோனிகா சரியாக புரிந்துகொள்ளாமல் போய்விட்டாரோ எனவும் குட்டி பத்மினி தெரிவித்து இருக்கிறார். மேலும் இமான் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகாவை திருமணம் செய்துகொண்டார். பிறகு கடந்த 2021 ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு கடந்த 2022 -ஆம் ஆண்டு மே மாதம் அமேலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“ஜெயலலிதா நினைவு எல்லோரது மனதிலும் இருக்கும்” – நடிகர் ரஜினிகாந்த் மரியாதை.!

சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும்,…

49 minutes ago

இபிஎஸ் தலைமையில் ஜெ. பிறந்தநாள் விழா! மீண்டும் செங்கோட்டையன் ‘ஆப்சென்ட்’!

சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…

58 minutes ago

தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில்,  டோமலபெண்டா…

2 hours ago

“விஜய் கட்சி ஆரம்பத்ததில் இருந்து..,” விலகல்கள் குறித்து விளக்கம் அளித்த சீமான்!

சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…

3 hours ago

வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…

3 hours ago

இலங்கை கடற்படை சிறைபிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.!

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…

3 hours ago