லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து எடுக்கவுள்ள இரும்பு கை மாயாவி எப்படி பட்ட படம் என்பதை கலை இயக்குனர் சதீஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இரும்பு கை மாயாவி
நடிகர் சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப்படம் ‘இரும்பு கை மாயாவி’. லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தாலும் அவருடைய கனவு படமாக இருப்பது ‘இரும்பு கை மாயாவி’ தான். லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கிய சமயத்திலேயே ‘இரும்புக்கை மாயாவி’ படத்தின் கதையை சூர்யாவுடன் லோகேஷ் கனகராஜ் கூறினாராம்.
கதையை கேட்டு பூரித்துப்போன சூர்யா
லோகேஷ் கனகராஜ் கூறிய கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டதாம். இருந்தாலும் படத்தின் கதையை பாதி மட்டும் இருக்கும் நிலையில், மீதி கதை மற்றும் லோகேஷ் கனகராஜ் தான் கமிட் ஆகியுள்ள படங்களை இயக்கி முடித்த பிறகு ‘இரும்பு கை மாயாவி’ படத்தின் வேலைகளை தொடங்குவார். இதனை லோகேஷ் கனகராஜே பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
இரும்புக்கை மாயாவி படம் எப்படி இருக்கும்?
இந்த நிலையில், இரும்புக்கை மாயாவி படம் எப்படி இருக்கும் என்பது பற்றி கலை இயக்குனர் சதீஷ் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இரும்பு கை மாயாவி படத்தை பற்றி நாங்கள் கைதி படம் சமயத்தில் பேசிக்கொண்டு இருந்தோம். அந்த படம் கண்டிப்பாக பயங்கரமாக இருக்கும். அந்த கதையை கேட்டவுடனே நான் மிரண்டு போய்விட்டேன் பிறகு இந்த கதையை நாம் எப்படி செய்யப்போகிறோம் எப்படி அவர் எடுக்கப்போகிறார் என்றெல்லாம் யோசனை எனக்கு வந்தது.
தேள் கொடுக்கு ரெடி! ரசிகர்களுக்கு ரோலக்ஸ் அப்டேட் கொடுத்த சூர்யா!
ஆனால், இப்போது அந்த படத்திற்கு தயாராகிவிட்டோம். இந்த படம் தள்ளி போக காரணம் நாம் இன்னும் தயாராகவில்லை அதனால் தள்ளி செல்வதாக நான் நினைத்துக்கொள்வேன். ஆனால், படம் சூர்யாவின் கேரியரில் சிறந்த படமாக இருக்கும். லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஸ்டைலில் ஒரு fiction படத்தை எடுக்க போவதாகவும் சதீஷ் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்துள்ளனர்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…