ranveer singh deep fake [File Image]
Ranveer Singh: மக்களவைத் தேர்தல் பற்றி நடிகர் ரன்வீர் சிங் பேசியது Al மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என தெரியவந்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கு மத்தியில், பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கானை தொடர்ந்து ரன்வீர் சிங், பிரதமர் மோடியை விமர்சிப்பது போல் காட்டும் வைரலான டீப்ஃபேக் வீடியோக்கள் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சமீப காலமாக, சமூக வலைத்தளங்களில் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதுவே இந்த தேர்தல் காலம் வரும்போது இது ஒரு பெரிய பிரச்சனையாகிவிடுகிறது.
அதாவது, சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகர் ரன்வீர் சிங் பேசுவதுபோல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால், அரசியல் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங், தரப்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம், வைரலாக பரவிய வீடியோவில் இருந்த காட்சிகள் உண்மையாக இருந்தாலும், டீப் ஃபேக் மூலம் குரல் மாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அதில், பாஜகவை விமர்சித்து, காங்கிரஸுக்கு ஆதரவாக ரன்வீர் சிங் பேசியது போன்று டீப் ஃபேக் வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த போலி வீடியோ உருவாக்கம் தொடர்பாக ரன்வீர் சிங், காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து, சைபர் கிரைம் பிரிவு விசாரணைக்காக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…