50 லட்சம் கொடுங்க படம் பண்ணலாம்! பணத்தை வாங்கி பெரிய விஷயம் செய்த கேப்டன் விஜயகாந்த்!

Published by
பால முருகன்

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் சம்பளம் வாங்காமலும் நடித்து இருக்கிறார். சில படங்களில் அட்வான்ஸ் கூட வாங்கி கொள்ளாமல் படம் முடித்த பிறகு சம்பளமாக வாங்கி இருக்கிறார். இதனை அவருடன் பல படங்களில் ஒன்றாக பணியாற்றிய பிரபலங்கள் பலரும் கூறி நாம் பார்த்திருப்போம். அப்படி தான் பிரபல தயாரிப்பாளரான சந்திரபிரகாஷ் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் செய்த விஷயம் ஒன்றை பற்றி கூறியுள்ளார்.

read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

இது குறித்து பேசிய சந்திரபிரகாஷ் ” கேப்டன் விஜயகாந்த் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் பாதி படங்களில் அட்வான்ஸ் தொகை வாங்காமல் தான் நடித்து இருக்கிறார். அவர் அட்வான்ஸ் வாங்கியது ஒரே ஒரு காரணத்துக்காக தான். அதில் இருந்து தான் விஜயகாந்த் தான் நடிக்கும் படங்களுக்கு அட்வான்ஸ் வாங்க ஆரம்பித்தார்.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

எதற்காக என்றால் அவர் நடிப்பில் வெளியாகவிருந்த காவிய தலைவன் படம் சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. அந்த சமயத்தில் பணம் இருந்தால் அந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற சூழ்நிலை இருந்தது. எனவே, விஜயகாந்த் எனக்கு போன் செய்து என்னிடம் 50 லட்சம் அட்வான்ஸ் வேண்டும் இருந்தால் கொடுங்கள் நாம் உடனடியாக படம் பண்ணலாம் என்று கூறினார்.

read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

அவர் அப்படி அட்வான்ஸ் கேட்ட காரணமே அந்த காவிய தலைவன் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தான். ஆனால் என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் நான் இல்லை என்று கூறிவிட்டேன். பிறகு வேறு படத்தில் நடிக்க கமிட் ஆகி அந்த பணத்தை வாங்கி தான் காவிய தலைவன் படத்தின் ரிலீஸ்க்கு பெரிய உதவி செய்தார்” எனவும் சந்திரபிரகாஷ் கூறியுள்ளார். விஜயகாந்த் செய்த இந்த உதவி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

13 hours ago