ஓடிடியில் மட்டும் இத்தனை கோடியா? முரட்டு வியாபாரத்தில் புஷ்பா 2!!

Published by
பால முருகன்

புஷ்பா 2  : அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஓடிடி விற்பனை விலை மற்றும் சேட்டிலைட்  விற்பனை விலை குறித்த தகவல் இந்திய சினிமாவையே அதிர வைத்து இருக்கிறது.

இந்திய சினிமாவே காத்து இருக்கும் திரைப்படங்களில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் “புஷ்பா 2” படமும் ஒன்று. இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார்.  படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 400 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் படத்தில் இருந்து பாடல்களையும் படக்குழு வெளியீட்டு கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே, ‘புஷ்பா புஷ்பா’ என்ற பாடலும், ‘சூடானா’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எங்கயோ கொண்டு சென்று இருக்கும் நிலையில், படத்தின் விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், புஷ்பா 2 படத்தின் ஓடிடி விற்பனை விலை மற்றும் சேட்டிலைட்  விற்பனை விலை குறித்த தகவல் வெளியாகி பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பா படத்தின் ஓடிடி உரிமையயை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ( Netflix ) நிறுவனம் கிட்டத்தட்ட 250 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறதாம். அதைப்போல, படத்தின் சேட்டிலைட்  உரிமையை ஸ்டார் மா (Star Maa) சேனல் 135 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறதாம். படத்தின் பட்ஜெட் 400 கோடி தான். இதனை படம் வெளியாவதற்கு முன்பே விற்பனையில் கிட்டத்தட்ட பட்ஜெட்  பணத்தை எடுத்து இருப்பது இந்திய சினிமாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட 385 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கும் நிலையில், படம் வெளியான பிறகு வசூலிலும் ஒரு கலக்கு கலக்கும். எனவே, படத்தை தயாரிக்கும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு பண மழை தான் கொட்டப்போகிறது என்கிறது கோடம்பாக்கம்.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago