பிறந்தநாள் பார்ட்டியில் தயாரிப்பாளர் கலந்துகொள்ளவில்லையா?! அப்போ இந்தியன்-2 அவ்வளோதானா?!

Published by
மணிகண்டன்

உலகநாயகனின் பிறந்தநாள் பார்ட்டியில் இந்தியன்-2 தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்துகொள்ளவில்லையாம்.

இம்மாதம் 7ஆம் தேதியன்று உலகநாயகன் கமல்ஹாசன் தனது 67வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்த மழை மட்டும் பெய்யாது இருந்திருந்தால் அவரது ரசிகர்கள் இன்னும் சிறப்பானதாக இந்த பிறந்தநாளை கொண்டாடி இருப்பர். இருந்தும் பல்வேறு இடங்களில் உலகநாயகனின் பிறந்தநாள் நன்றாக கொண்டாடப்பட்டது.

சினிமா பிரபலங்கள் தங்கள் பிறந்தநாளுக்கு தங்கள் நண்பர்கள், வேண்டியவர்களுக்கு பார்ட்டி வைப்பதுண்டு. அதே போல உலகநாயகனின் பிறந்தநாளுக்கும் பார்ட்டி வைக்கப்பட்டதாம். அதற்கு பல திரைபிரபலன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். அந்த அழைப்பில், இந்தியன் 2 தயாரிப்பாளர் சுபாஷ்கரனும் அடக்கம்.

ஆனால், மதுரை வரை வந்த சுபாஷ்கரன் எதோ சில காரணங்களால், பார்ட்டியில் கலந்துகொள்ளாமல், லண்டன் புறப்பட்டு சென்றுவிட்டாராம். முக்கியமான வேலை இருந்திருக்கும் என சிலர் கூறினாலும், ஒரு சிலர், என்னதான் முக்கிய வேலையாக இருந்தாலும் தன் பட முன்னணி ஹீரோ அதுவும் உலகநாயகன் கூப்பிட்டும் வரவில்லையே என வருத்தத்தில் உள்ளனராம்.

இந்தியன்-2வில் ஏற்பட்ட பிரச்சனைகள், இன்னும் தீர்வு காணப்படாமல், எப்போது ஆரம்பிக்கும் என தெரியாமல் அந்த மன கசப்பில் தான் சுபாஷ்கரன் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என கூறிவிட்டு செல்கின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

6 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

3 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

4 hours ago