இந்தியன் 2 விபத்து! உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த கமலஹாசன்! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Published by
லீனா

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2.  கடந்த மாதம் 20-ம் தேதி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் உள்ளிட்ட மூன்று பேர் பலியானார்கள். 

இதனையடுத்து, நடிகர் கமலஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மார்ச் 18-ம் தேதி விபத்து நடைபெற்ற ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கு நேரில் வந்து சம்பவம் தொடர்பாக நடித்துக் காட்ட வேண்டும் என நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

 நடிகர் கமலஹாசன் ஏற்கனவே கடந்த மூன்றாம் தேதி அன்று,  விசாரணைக்கு ஆஜரான நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு வந்து சம்பவ இடத்தில் நடித்துக் காட்ட வேண்டுமென்று சம்மன் அனுப்புவது அரசியல் பழிவாங்கும் செயல் என கமல்ஹாசன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு, நடிகர் கமலஹாசனுக்கு மட்டும், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வரவேண்டும் என்று  கூறவில்லை. விபத்தை நேரில் பார்த்த மற்ற பட குழுவினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும், கதாநாயகன் என்பதால் விசாரணை தொடர்பாக சம்பவ இடத்திற்கு வர நடிகர் கமலஹாசனுக்கு விலக்கு அளிக்க முடியாது என வாதிடப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கமலஹாசன் வராவிட்டால்  அது, புலன் விசாரணையை பாதிக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், நடிகர் கமலஹாசன் விபத்தில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நடித்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். மேலும் விசாரணைக்குத் தேவைப்பட்டால் விசாரணை அதிகாரி அலுவலகத்திற்கு ஆஜராகலாம் என்றும்,நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

21 minutes ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

23 minutes ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

1 hour ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

2 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

2 hours ago

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

3 hours ago