அப்படி தான் சாரப்பாம்பு சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். பேட்டியில் பேசிய அவர் ” விஜயகாந்த் அண்ணன் 100 இயக்குனர்கள், 100 உதவி இயக்குனர்கள், 100 பேர் என அனைவருக்குமே ஒரே நேரத்தில் சாப்பாடு போட்டு அவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பார். படப்பிடிப்பு சமயத்தில் தூங்குவதற்கு கூட தாமதமாக தான் வருவார்.
படப்பிடிப்பு எல்லாம் முடிந்து அனைவரும் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கி இருப்பார்கள். சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். அந்த சமயம் விஜயகாந்த் அண்ணன் வருவார். நாங்கள் ஒரு முறை அண்ணா வாங்க என்று எழுந்துவிட்டோம். ஒரு சிலர் மட்டும் தூங்கி கொண்டு இருந்தார்கள். நாங்கள் சத்தம் போட்டதை பார்த்துவிட்டு அமைதியாக இருங்கள் அவங்க தூங்கட்டும் எழுப்பாதீங்க என்று கூறினார்.
கூறிவிட்டு அந்த பக்கம் சும்மாக இடம் இருந்தது அந்த இடத்தில் படுத்து தூங்கிவிட்டு அடுத்த நாள் அனைவரும் கண் முழிப்பதற்கு முன்பாகவே அதாவது 5 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிடுவார். அவரை போல ஒரு மனிதரை நான் என்னுடைய வாழ்வில் பார்த்ததே இல்லை” எனவும் விஜயகாந்த் பற்றி சாரப்பாம்பு சுப்புராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…