தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் சிறந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது.
இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தேசியவிருதுகள் மட்டுமின்று பல விருதுகளை குவித்து வருகிறது. இவர் தற்போது விடுதலை மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் படங்கள் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ரசிகர்களையும் கவர்கிறது.
தமிழில் மட்டும் இல்லாமல் வெற்றிமாறனுக்கு தெலுங்கு, ஹிந்தி போன்ற பகுதிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு. இந்த நிலையில் வெற்றிமாறன் குறித்து பிரபல தெலுங்கு நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்கள்.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் தற்போது “ஆர்ஆர்ஆர்” என்ற பிரமாண்ட திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக நாளை இந்த படம் வெளியாகவுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரனிடம் தமிழில் எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது…அதற்கு பதிலளித்த இருவரும் ” வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்கவேண்டும்…கமர்ஷியல் கதையை மிகவும் சிறப்பாக இயக்குகிறார்..அசுரன் திரைப்படத்தை பார்த்து மிரண்டு விட்டோம்..நாங்கள் தமிழில் படம் நடித்தால் அது நிச்சயம் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படமாகத்தான் இருக்கும்” என கூறியுள்ளனர்.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…