தமிழில் இந்த இயக்குனர் தான் வேணும்.! அடம் பிடிக்கும் RRR நடிகர்கள்.!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் சிறந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது.

இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தேசியவிருதுகள் மட்டுமின்று பல விருதுகளை குவித்து வருகிறது. இவர் தற்போது விடுதலை மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் படங்கள் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ரசிகர்களையும் கவர்கிறது.

தமிழில் மட்டும் இல்லாமல் வெற்றிமாறனுக்கு தெலுங்கு, ஹிந்தி போன்ற பகுதிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு. இந்த நிலையில் வெற்றிமாறன் குறித்து பிரபல தெலுங்கு நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்கள்.

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் தற்போது “ஆர்ஆர்ஆர்” என்ற பிரமாண்ட திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக நாளை இந்த படம் வெளியாகவுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரனிடம் தமிழில் எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது…அதற்கு பதிலளித்த இருவரும் ” வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்கவேண்டும்…கமர்ஷியல் கதையை மிகவும் சிறப்பாக இயக்குகிறார்..அசுரன் திரைப்படத்தை பார்த்து மிரண்டு விட்டோம்..நாங்கள் தமிழில் படம் நடித்தால் அது நிச்சயம் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படமாகத்தான் இருக்கும்” என கூறியுள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

2 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

3 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

4 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

5 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

6 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

8 hours ago