சினிமா

பணம் வேஸ்ட் ஆயிடும் நான் மரத்து மேலயே இருக்கிறேன்! தயாரிப்பாளரை நெகிழ வைத்த விஜயகாந்த்!

Published by
பால முருகன்

கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்யும் தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.  ஆனால், அவர் தான் நடிக்கும் படங்களின் பட தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் கூட நஷ்டம் ஏற்பட கூடாது என விரும்புவாராம். இதனாலே, தன்னுடைய  பணத்தில் எடுக்கப்பட்ட படம் என்றால் எந்த அளவிற்கு சிக்கனமாக செலவை குறைக்க முடியுமோ அதைப்போலவே குறைத்துவிடுவாராம்.

குறிப்பாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்  விஜயகாந்த் நடிப்பில்  கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ‘கஜேந்திரா’  திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நடிகர் விஜயகாந்த் மரத்தின் மீது கீழே தொங்கிக்கொண்டு சண்டை காட்சி செய்வது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டு வந்ததாம் .

அந்த காட்சியின் போது பல டேக்குகள் போகும் என்பதால் நடித்துவிட்டு நடித்துவிட்டு நடிகர் விஜயகாந்த் அந்த மரத்தின் உடைய கிளைகளில் உட்கார்ந்திருப்பாராம். கிரேன் வழியாக அவர் கீழே இறங்குவதற்காக அங்கு ஒரு வண்டியும் நிறுத்தப்பட்டிருந்ததாம் . ஆனால் நடிகர் விஜயகாந்த் நடித்துவிட்டு அந்த காட்சி சரியாக வரவில்லை என்றால் மீண்டும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு அதனுடைய கிளைகளிலே அமர்ந்து கொண்டு கீழவே இறங்க மாட்டாராம் .

எவ்வளவு மணி நேரம் ஆகியும் கீழே இறங்காமல் நடித்துவிட்டு நடித்துவிட்டு அந்த இடத்திலேயே இருப்பாராம் . பிறகு இயக்குனர் கீழே வாருங்கள் தாமதமாக இந்த காட்சியை எடுத்துக் கொள்வோம் எனக் கூறினால் அதற்கு தாமதமானால் நாட்கள் சென்று கொண்டே இருக்கும் தயாரிப்பாளர் பாவம் இல்லையா ? அவருக்கு பணம் நஷ்டம் எதுவும் வரக்கூடாது நம்மால் அவருக்கு கொடுத்த நாட்களில் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும்.

இப்போது நான் கீழே இறங்கினால் திருப்பி மேலே ஏற வேண்டும் திருப்பி கீழே இறங்க வேண்டும் அதற்கே இந்த நாட்கள் எல்லாம் கடந்து விடும் எனவே அதற்கு நான் மேலேயே இருக்கிறேன் முடிந்த அளவிற்கு படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் எனவும் கூறுவாராம். இதனை பார்த்த தயாரிப்பாளரும் அந்த சமயமே மிகவும் வியந்துபோனாராம்.

இந்த தகவலை கஜேந்திரா திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரமேஷ் கண்ணா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் .மேலும் கஜேந்திரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ஹிட்டானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

26 minutes ago

Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…

37 minutes ago

2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? அசுர பலத்துடன் காத்திருக்கும் ஆஸ்திரேலியா!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…

1 hour ago

“சீக்கிரமா குழந்தைகள் பெத்துக்கோங்க..,” மீண்டும் ‘அதனை’ குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…

2 hours ago

அண்ணாமலை vs தங்கம் தென்னரசு! தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு? இந்தியாவின் கடன் எவ்வளவு?

சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத்…

3 hours ago

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

14 hours ago