சினிமா

எனக்கு 30 வருஷமா அது தான் துணை! சிகரெட் குடித்தது பற்றி மனம் திறந்த ஷகிலா!

Published by
பால முருகன்

நடிகை ஷகிலா ஆரம்ப காலகட்டத்தில் ஆபாசமான படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கவர்ச்சி நடிகையாக மக்கள் பார்க்கும் காரணத்தால் படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். பிறகு அவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2-வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த நிலையில் அதில் கலந்து கொண்டு சமையல் செய்து அசத்தினார்.

அருமையாக சமையல் செய்து செப்களை ஆச்சார்ய படுத்தியது போல காமெடியான பல விஷயங்கள் செய்து மக்களின் மனதில் இடமும் பிடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரை கோமாளியாக கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் தங்களுடைய அம்மா போலவே பாசமாக பழகி கொண்டு அவரை ஷகி மா என அன்புடன் அழைக்க தொடங்கினார்கள்.

இதனை பார்த்த ரசிகர்களும் ஷகி மா என்றே அழைக்க தொடங்கினார்கள். இதனால் ஆபாச நடிகை என்ற பிம்பத்தை மாற்றி ஷகிலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு நல்ல பெயரை கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.

பாக்கியராஜ் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த ‘கிஃப்ட்’! நெகிழ்ந்து போன பூர்ணிமா!

அது மட்டுமின்றி, பிக் பாஸ் சீசன் 7 தெலுங்கு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்ட ஷகிலா ஒரு முறை சிகரெட் குடித்துக்கொண்டு  இருந்தார். அதற்கான பூகிபடமும் மிகவும் வைரலானது. இதனை பார்த்த பலரும் சற்று அதிர்ச்சியாகி ஷகி மாவா இப்படி செய்தார் எனவும் கேள்வி எழுப்பினார்கள். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சிகரெட் குடித்ததற்கு  பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்கு விமர்சனங்களும் எழுந்தது.

இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷகிலா சிகரெட் குடித்தது பற்றி பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் சிகரெட் பிடித்தது அதற்கான ரூமில் சென்று தான் குடித்தேன் அங்கு கேமரா இருந்தது அதனை மறைக்க நான் சொல்லியும் மறைக்கவில்லை பிறகு நான் சிகரெட் குடித்தது வெளிய தெரிந்தது. என்னை பிடித்தவர்களுக்கு நான் அப்படி செய்தது வருத்தமாக இருக்கும்.

நான் அதற்கு இந்த நேரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், இந்த மாதிரி எல்லாம் அன்பு கிடைப்பதற்கு முன்னாடி ஒரு 30 வருடங்கள் எனக்கு நண்பர், துணையாக இருந்தது இந்த சிகரெட் தான். எனவே அதன் காரணமாகி தான் இந்த சிகரெட்டை நிறுத்தமுடியவில்லை” என நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார். இவர் இப்படி பேசுவதை பார்த்த ரசிகர்கள் அப்போ நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் அந்த அளவிற்கு தனிமையாக இருந்த காரணத்தால் தான் ஷகிலாவுக்கு புகைபிடிக்கும் பழக்கம் வந்திருக்கும் என கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

2 minutes ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

2 hours ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

2 hours ago

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…

2 hours ago

சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…

2 hours ago

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

4 hours ago