மகள் பவதாரிணியின் மறைவைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘என்றும் ராஜா ராஜாதான்’ என்ற இசை நிகழ்ச்சி, இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள சுகதத்தாச் உள் அரங்கில் நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்தது. இந்த நிலையில், உடல்நலக் குறைவால் பவதாரிணி நேற்று திடீரென உயிரிழந்ததால், இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தற்பொழுது, பாடகி பவதாரிணியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதற்காக இளையராஜா இல்லத்தில் பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல், இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…