நல்ல கதையை நம்பி படம் எடுத்தால் மக்களை சேரும்...'அயோத்தி' இயக்குனர் நம்பிக்கை.!

இயக்குனர் மந்திர மூர்த்தி என்பவர் இயக்கத்தில் சசிகுமார், யஷ்பால் சர்மா, போஸ் வெங்கட், புகழ் ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான

இயக்குனர் மந்திர மூர்த்தி என்பவர் இயக்கத்தில் சசிகுமார், யஷ்பால் சர்மா, போஸ் வெங்கட், புகழ் ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அயோத்தி’.. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

unknown node

Ayothi [Image Source : Google ]

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் இந்த திரைப்படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும், இந்த திரைப்படம் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது.

unknown node

Ayothi [Image Source : Google ]

இந்த நிலையில், ‘அயோத்தி’ திரைப்படத்தின் இயக்குனர் மந்திர மூர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில் ” இந்த திரைப்படம் முதலிலே ஹிட் ஆகும் என எனக்கு தெரியும். நல்ல கதையம்சத்தை கொண்ட படம் எடுத்தால் கண்டிப்பாக மக்களை சேரும். இந்த திரைப்படத்தில் அம்மா, அப்பா, மகள், மகள், கணவன், மனைவி, அக்கா , தம்பி, எல்லோருக்குமான எமோஷனல் காட்சிகள் இருக்கு.

unknown node

manthira moorthy [Image Source : Google ]

இந்த படத்தின் கதை அயோத்தியில நடைபெறுகிறது. எனவே, படத்தில் இந்தி நடிகர்கள் சிலர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். எனவே, இந்தி நடிகர் யஷ்பால் சர்மா வந்தார். ஹீரோயினா நடிச்சிருக்கிற பிரீத்தி அஸ்ரானி நடித்தார்கள். “என கூறியுள்ளார்.