தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
இதற்கிடையில், பீஸ்ட் படத்தில் செல்வராகவன் தேர்வு செய்தது குறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் “தற்போது செல்வராகவன் சார் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதை கேள்விபட்டவுடன் தான் பீஸ்ட் படத்தில் அவரைத் தேர்வு செய்தோம். அவர் படங்களில் நடிக்காமல் இருந்திருந்தால் நேரில் சென்று எனக்கு கேட்கக்கூட தைரியம் வந்திருக்காது.
அவரை வைத்து பத்து நாள் தான் படப்பிடிப்பு நடத்தினோம் . ஆனால் அவர் படம் முழுவதும் வருவார் ஒரு வார்த்தைக்கூட படப்பிடிப்பின் போது பேச மாட்டார். அவர் மிகப்பெரிய இயக்குனர். ஆனால் அந்த சிந்தனையே அவருக்கு இருக்காது. நடிக்க ஆரம்பித்துவிட்டால் நடிகராகதான் இருப்பார்.
ஒரு சீனை குறைக்கலாம் , மாற்றலாம், என்று எதுவுமே சொல்ல மாட்டார். அவருடைய கதாபாத்திரமும் படத்தில் அருமையாக இருக்கும்விஜய் சாரும் செல்வா சார் கதாபாத்திரம் நல்லா இருக்கு என்று கூறினார்.” என நெல்சன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…