கொட்டுக்காளி ஹிட் ஆச்சுன்னா இதை கண்டிப்பா பண்ணுவேன்! சிவகார்த்திகேயன் உறுதி!

Published by
பால முருகன்

சென்னை : “கொட்டுக்காளி” படம் வெற்றி பெற்று நல்ல லாபம் கிடைத்தால், வினோத் போன்ற பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பதில் ஒரு பக்கம் ஆர்வம் செலுத்துவது போல மற்றோரு பக்கம் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் சூரியை வைத்து ‘கொட்டுக்காளி’ என்கிற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தினை கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார்.

கூழாங்கல் திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘கொட்டுக்காளி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் ஏற்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் வரும் 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் ” கூழாங்கல் படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் வினோத்ராஜ் போன்ற திறமையான ஆட்களை வெளியே தெரியப்படுத்த வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். எனவே, அவரின் அடுத்த படத்தை கதை கூட கேட்காமல் நான் தான் தயாரிப்பேன் என்ற முடிவோடு தயாரித்துள்ளேன். இந்த கொட்டுக்காளி திரைப்படம் தொடங்கப்பட்டதுக்கு ஒரே ஒரு காரணம் வினோத்ராஜை கொண்டாடுவதற்கு மட்டும் தான்.

மற்றபடி படத்தின் கதை, பட்ஜெட், எவ்வளவு என்பதுகூட எனக்கு தெரியாது. முதலில் கதை சொல்லும்போதே நான் இயக்குனரிடம் சொல்லிவிட்டேன் என்னிடம் முழு கதையை சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் அதில் மாற்றம் செய்ய சொல்லி பேச்சு வரும். எனவே, கதை சொல்லவே வேண்டாம்…உங்களுக்கு என்ன எடுக்கணும்னு தோணுதோ அதை அப்படியே எடுங்க என்று சொன்னேன்.

கண்டிப்பாக இந்த படம் வெற்றியடைந்தது என்றால் அதில் வரும் பணத்தை எடுத்து அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் ஆக கொடுப்பேன். அதைப்போல இன்னும் படத்திற்கு இலாபம் கிடைத்தது என்றால் வினோத் ராஜை போலவே, வேறு எங்கும் இயக்குனர்கள் இருந்தால் அவரை தேடி அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து வாய்ப்பு வழங்குவேன்.

சினிமாவில் சம்பாதிக்கிற மாதிரி படம் எடுப்பது என்பது மிகவும் முக்கியம். ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதில் பணம் போட்டு அதனுடைய லாபத்தை எடுக்க வேண்டும். எனக்கு நீங்கள் நடிகன் என்று அங்கீகாரம் கொடுத்து ஸ்டார் ஆக்கி என்னுடைய படத்தின் வியாபாரத்தை மிகவும் பெரிதாக்க உதவி இருக்கிறீர்கள்.

அப்படி சம்பாதித்த பணத்திலிருந்து சினிமாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக நான் படங்களை தயாரித்து வருகிறேன்” என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் பேசியதை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுடைய மனசு தங்கம் தான் சார்’ என அவரை பாராட்டி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

8 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

8 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

9 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

9 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago