அவர் மட்டும் இல்லனா தற்கொலை பண்ணிருப்பேன்! மும்தாஜ் சொன்ன பகீர் தகவல்!

Published by
பால முருகன்

Mumtaj : அண்ணன் மட்டும் இல்லை என்றால் நான் தற்கொலை செய்து இருப்பேன் என நடிகை மும்தாஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் , தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் ஒரு காலத்தில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் நடிகை மும்தாஜ். இவர் விஜய்யுடன் இணைந்து ஆடிய கட்டிபுடி கட்டிப்புடி டா பாடல் இன்னும் வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஆனால் , நல்ல நடிப்பு திறமை இருந்தும் கூட இவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. கடைசியாக தமிழில் ராஜாதி ராஜா படத்தில் தான் நடித்து இருந்தார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் மும்தாஜிற்கு பெரிய அளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில், பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகை மும்தாஜ் தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை வேதனையுடன் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய மும்தாஜ் ” ஒரு முறை எனக்கு குறுக்கு மிகவும் அதிகமாக வலித்தது. அந்த வலியை என்னால் வார்த்தைகளால் கூறவே முடியவில்லை.

அந்த வலி ஏற்பட்ட போது என்னால் என்னுடைய முதுகை கூட அசைக்கக்கூட முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அந்த வலியை தாங்க முடியாமல் அனுபவித்தேன்.. அதன்பிறகு. மருத்துவமனையில் ஆராய்ச்சி செய்து, ஆட்டோ இம்யூன் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டது எனக்கு தெரிய வந்தது. இந்த நோயினால் என்னுடைய உடலில் எங்கு எலும்பு மூட்டுகள் இருந்தாலும் பயங்கர வலி ஏற்பட்டது.

அந்த நேரங்களில் எல்லாம் என்னால் நிற்கவோ. உடலை அசைக்கவோ முடியாமல் நரகத்தில் இருந்தது போல உணர்ந்தேன். இதனால் ரொம்பவே மனா உளைச்சலுக்கும் ஆள் ஆனேன். ஒரு முறை இதனால் ரொம்பவே நொந்துபோய் இரண்டு மணி நேரம் அழுதுகொண்டே இருந்தேன். பிறகு இதில் இருந்து என்னுடைய அண்ணன் தான் என்னை வெளியே கொண்டு வந்தார். அவர் மட்டும் இல்லை என்றால் தற்கொலை செய்து இருப்பேன்” எனவும் மும்தாஜ் கூறியுள்ளார். முதுகு வலிக்கு மும்தாஜ் தற்கொலை செய்ய துணிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

12 minutes ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

42 minutes ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

1 hour ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

3 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

4 hours ago