ஹிந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணடிக்க மாட்டேன்- மகேஷ் பாபு.!

Published by
பால முருகன்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ் பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மேஜர் என்ற ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது .

அந்த விழாவில் மகேஷ் பாபு இந்தி படங்களில் நடிப்பது குறித்து சில விஷயங்களை கூறியதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பேசிய அவர் ” எனக்கு பான் இந்தியா நட்சத்திரமாக உருவாக வேண்டும் என்ற ஆசை துளி கூட கிடையாது. நான் நடிக்கும் தெலுங்கு திரைப்படங்களும், மற்ற திரைப்படங்களும் நாடு முழுவதும் ரசிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

எனக்கு இந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், நான் ஒருபோதும் இந்தியில் நடிக்க மாட்டேன். எனக்கு ஏற்ற சம்பளத்தை பாலிவுட்டால் கொடுக்க முடியாது. அதனால் இந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை”. என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

46 minutes ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

1 hour ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

2 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

3 hours ago