அந்த நடிகர் படம்னா போதும்… ஃப்ரீயாவே நடிப்பேன் – கீர்த்தி சுரேஷ்!

Published by
பால முருகன்

சென்னை : அந்த நடிகர் படம் என்றால் சம்பளம் கூட வாங்காமல் நடிப்பேன் என பிரபல நடிகர்  பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ரகு தாத்தா படத்தின் ப்ரோமோஷனில் பிசியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி தான் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம் சம்பளம் வாங்காமல் எந்த ஹீரோ கூட நடிப்பீர்கள்? என நிருபர்கள்  கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு சிரித்த முகத்துடன் பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் ‘ நடிகர்  நானியின் புகைப்படத்தை காண்பித்து  இவருடைய படம் என்றால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என  தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய, கீர்த்தி சுரேஷ் எனக்கும் நானிக்கும் இடையேயான நட்பு  மிக சிறந்தது. அவரை போல, நல்ல நண்பர் கிடைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என நெகிழ்ச்சி பட தெரிவித்தார்.

கீர்த்தி சுரேஷ் நானியுடன் நடித்த நேனு லோக்கல், தசரா இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்று இவர்களுடைய கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நானியை சந்தித்தபோது கூட அந்த இரண்டு படங்களையும்  தொடர்ந்து மூன்றாவதாக நாம் சேர்ந்து நடிக்க வேண்டும். அந்த படம் நமக்கு ஹட்ரிக் வெற்றியடைய வேண்டும் என நானியிடன் தான் சொன்னதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.

நேனு லோக்கல், தசரா இரண்டு வெவ்வேறு கதைக்களம் கொண்ட படம் என்பதால் இது போன்று  இல்லாமல் வித்தியாசமான ஒரு கதையில் இருவரும் சேர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளதாகவும்,  மீண்டும் நானியுடன் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் எனவும், அந்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்து இருக்கிறார்.

சம்பளம் கூட  இல்லாமல் நானி கூட நடிப்பேன் என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளது அவர் மீது வைத்துள்ள அன்பை எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது. மேலும், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

28 minutes ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

28 minutes ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

59 minutes ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

1 hour ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

2 hours ago