அந்த நடிகர் படம்னா போதும்… ஃப்ரீயாவே நடிப்பேன் – கீர்த்தி சுரேஷ்!

Published by
பால முருகன்

சென்னை : அந்த நடிகர் படம் என்றால் சம்பளம் கூட வாங்காமல் நடிப்பேன் என பிரபல நடிகர்  பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ரகு தாத்தா படத்தின் ப்ரோமோஷனில் பிசியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி தான் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம் சம்பளம் வாங்காமல் எந்த ஹீரோ கூட நடிப்பீர்கள்? என நிருபர்கள்  கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு சிரித்த முகத்துடன் பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் ‘ நடிகர்  நானியின் புகைப்படத்தை காண்பித்து  இவருடைய படம் என்றால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என  தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய, கீர்த்தி சுரேஷ் எனக்கும் நானிக்கும் இடையேயான நட்பு  மிக சிறந்தது. அவரை போல, நல்ல நண்பர் கிடைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என நெகிழ்ச்சி பட தெரிவித்தார்.

கீர்த்தி சுரேஷ் நானியுடன் நடித்த நேனு லோக்கல், தசரா இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்று இவர்களுடைய கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நானியை சந்தித்தபோது கூட அந்த இரண்டு படங்களையும்  தொடர்ந்து மூன்றாவதாக நாம் சேர்ந்து நடிக்க வேண்டும். அந்த படம் நமக்கு ஹட்ரிக் வெற்றியடைய வேண்டும் என நானியிடன் தான் சொன்னதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.

நேனு லோக்கல், தசரா இரண்டு வெவ்வேறு கதைக்களம் கொண்ட படம் என்பதால் இது போன்று  இல்லாமல் வித்தியாசமான ஒரு கதையில் இருவரும் சேர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளதாகவும்,  மீண்டும் நானியுடன் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் எனவும், அந்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்து இருக்கிறார்.

சம்பளம் கூட  இல்லாமல் நானி கூட நடிப்பேன் என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளது அவர் மீது வைத்துள்ள அன்பை எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது. மேலும், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

2 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

2 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

2 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

3 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

3 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

3 hours ago