பதட்டத்துல பேசிட்டேன்! ‘அப்பா வேற நான் வேற’ ட்ரோலுக்கு பதிலடி கொடுத்த சூர்யா சேதுபதி!

Published by
பால முருகன்

சூர்யா சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி சினிமாவில் ஹீரோவாக ‘பீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெளியான சமயத்தில் சூர்யா சேதுபதி பேசிய விஷயம் ட்ரோலுக்கு உள்ளானது. அப்பா பெயரில் நான் சினிமாவுக்கு வர முடிவு செய்யவில்லை அப்பா வேற நான் வேற என கூறியிருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களுடைய அப்பா இல்லை என்றால் உங்களுடைய பெயர் யாருக்கும் தெரியாது முதலில் சரியாக பேச கற்றுக்கொள்ளுங்கள் என்று விமர்சிக்க தொடங்கினார்கள். மேலும், சிலர் அப்பா வேற நான் வேற என்று அவர் கூறியதை வைத்து ட்ரோலும் தொடர்ச்சியாக செய்து வந்தனர். இதனையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சூர்யா சேதுபதி பேசியுள்ளார்.

அவர் நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதனையடுத்து, அப்பா பெயரில் வரவேண்டாம் என்று நினைத்துவிட்டு எதற்காக விழாவிற்கு அப்பாவை அழைத்துள்ளார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த சூர்யா சேதுபதி ” இன்று தந்தையார் தினம் என்பதால் நான் அப்பாவுக்கு பரிசாக எதாவது கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன்.

எனவே, நான் நடித்துள்ள இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என்பதற்காக அழைத்து வந்தேன். அப்பா மட்டும் இல்லை என்னுடைய குடும்பத்தில் இருந்து அனைவரையும் அழைத்துள்ளேன். முன்னதாக அப்பா வேறு நான் வேறு என்று சொன்னதற்கு நான் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். நான் இதற்கு முன்னதாக பெரிதாக மேடைகளில் பேசியது இல்லை.

எனவே, பதட்டம் அதிகமாக இருந்தது. முதல் முதலாக ஒரு பேட்டியில் பேசுகிறோம் என்று பதட்டத்தில் பேசிவிட்டேன். மற்றபடி, நான் சீரிஸ் ஆக பேசவில்லை. நான் ஜாலியான ஒரு ஆள்” என கூறியுள்ளார். மேலும். இவர் நடித்துள்ள இந்த ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தினை இயக்குனர் அனல் அரசு இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அந்த விதியை முதல்ல எடுங்க..வேண்டுகோள் வைத்த வீரர்கள்..நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ?

துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…

13 minutes ago

அனுமதி தானே கேட்டேன் நான் செய்தது தவறா? – ஆவேசமான வேல்முருகன்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…

47 minutes ago

“வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!” கடுப்பான முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…

2 hours ago

தவெக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்.., ஒன்றாக களமிறங்கிய ஆதவ், ஆனந்த்!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…

2 hours ago

வீரப்பன் மகளுக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு! காளியம்மாள் இடத்திற்கும் புதிய நபர் நியமனம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…

3 hours ago

“அதிமுகவினருக்கு தைரியம் இருக்கா?” சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

3 hours ago