KPY Bala [file image]
சென்னை: கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதாக எழுந்த விமர்சனத்திற்கு KPY பாலா பதிலடி கொடுத்துள்ளார்.
கலக்கு போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் kpy பாலா என்ற பெயருடன் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், இப்பொது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்.
இவர் ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியன் மட்டும்மல்ல, அவர் தற்போது மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார். ஆம், தான் சம்பாதிக்கும் வருமானத்தில் பாதியை ஏழைகளுக்கு செலவு செய்து உதவி வருகிறார். இவ்வாறு தனியாக உதவி வந்த kpy பாலா, அண்மையில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மக்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இருவரும் இணைந்து தற்பொழுது பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த பாலா, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
அப்பொழுது, ஒருவர் தான் உதவி செய்த வீடியோ ஒன்றில் கமெண்ட்ஸ் செய்திருந்தார். அதில், இத்தனை உதவிகளை வழங்கி வரும் இவர், யாருடைய கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார் என கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், “நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை, அது மாதிரியான பணத்தில் நான் செலவு பண்ணல், வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில்தான் மக்களுக்கு உதவி செய்கிறேன்” என்று கூறினார். மேலும், எனக்கு பின்னாடி உதவி செய்யும் ஒரே நபர் அது ராகவா லாரன்ஸ் சார் மட்டும் தான் என கூறியுள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…