லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அவர் அடுத்ததாக எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் விஜய்யை வைத்து படம் இயங்குவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதையும் படியுங்களேன்-ரிலீஸ் ஆவதற்கு முன்பே 100 கோடி வசூல் செய்த லிகர்.! புதிய சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா…
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் மன்சூர் அலி கானுக்கு பெரிய கேரக்ட்டர் ஒன்று எழுதி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய லோகேஷ் கனகராஜ் ” மன்சூர் அலி கான் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ.
என்னுடைய அடுத்த படத்துல மன்சூர் அலி கானுக்கு ஒரு பெரிய கேரக்டர் எழுதியிருக்கேன். இன்னும் இதனை அவர்கிட்ட சொல்லவில்லை. விரைவில் கூறுவேன்” என்று கூறியுள்ளார். ஒரு காலத்தில் ஹீரோ வில்லன் எனும் கலக்கி வந்த மன் சூர் அலிகான் மீண்டும் சினிமாவில் நடிக்கவருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…