கோபத்தால் நிறைய இழந்திருக்கிறேன்…மேடையில் எமோஷனலான ஐஸ்வர்யா ராஜேஷ்.!

Published by
பால முருகன்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இயக்குனர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

SoppanaSundari
SoppanaSundari [Image Source : Google ]

அதன் ஒரு பகுதியாக நேற்று படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் ” சொப்பன சுந்தரி ” என்று இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்க காரணம் உள்ளது.நீங்கள் படம் பார்க்கும்  போது அது உங்களுக்கு தெரியும்.

Aishwarya Rajesh [Image Source : Google ]

மேலும், கண்டிப்பாக நீங்கள் இந்தத் திரைப்படத்தை பார்த்து ரசித்த பிறகு, பார்வையாளர்கள் அனைவரும் ஒரு திருக்குறளின் முழுமையான விளக்கத்தை முழுவதுமாக தெரிந்து கொள்வார்கள். நான் ஒரு கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் மட்டும் தான்.

Aishwarya Rajesh [Image Source : Google ]

இந்த படத்தில் என்னை ஹீரோயினாக வைத்து எடுக்கமாட்டேன் என இயக்குநர் சார்லஸ் கோபத்துடன் சென்றுவிட்டார். அதன்பின் அவரை அழைத்து கோபத்தால், எதுவும் நடக்காது. கோபத்தால் நான் நிறைய இழந்திருக்கிறேன் என்றேன். அதன்பின் இருவரும் படத்தில் ஒன்றாக பயணித்தோம்” என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago