தேசிய விருதை நினைத்து கூட பார்க்கவில்லை.! சூரரைப்போற்று பொம்மி ஓபன் டாக்.!

Published by
பால முருகன்

சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை 68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.  அதன்படி, சிறந்த படம் – சூரரைப்போற்று, சிறந்த நடிகர்- சூர்யா, சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி, சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா,மற்றும் ஷாலினி உஷா நாயர் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதில் மிக முக்கியமாக கருதப்படும் சிறந்த நடிகைக்கான விருது சூரரை போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தேசிய விருது வென்றதை குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி ஒரு நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதில் “நான் உண்மையாக எனக்கு விருது கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. தேசிய விருதுகள் பட்டியல் நேற்று மாலை அறிவிக்கும் போதுகூட எனக்குக் கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. தேசிய விருதில் என்னுடையப் பெயரைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

என்னோட குடும்பத்தினர், என் நண்பர்கள் அனைவரும் இதற்காக மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இவை அனைத்திற்கும் காரணம் படத்தில் நடிக எனக்கு வாய்ப்புக்கு கொடுத்த இயக்குநர் சுதா கொங்கராதான். இந்தப் பெருமை அவரைத்தான் சேரும். மேலும் சூர்யா சாருக்கு , ஜி.வி பிரகாஷ், சுதா கொங்கரா ஆகியோருக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என நெகிச்சியுடன் பேசியுள்ளார் அபர்ணா பாலமுரளி.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago