தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும், முகிழ், சக்கரம், கசட தாபர, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் “கருங்காப்பியம்” எனும் திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சினிமா துறையில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் கடந்து வந்த சவால்கள் மற்றும் தன்னிடம் ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நான் பல தடைகளை தாண்டி தான் சினிமாவிற்குள் வந்து இருக்கிறேன். நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். சினிமா மீது எனக்கு அதிகமாக ஆர்வம் இருந்தது. அந்த சமயம் எல்லாம் ஒரு படத்திலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என நான் ஆசையுடன் காத்திருந்திருக்கிறேன்.
நடிகைகளுக்கு 40 வயசு ஆனாலே கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டறாங்க! நடிகை ரேகா குமுறல்!
அப்படி ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு நான் சென்றேன். அந்த சமயம் எனக்கு வயது 20 இருந்திருக்கும். 20 வயதில் ஒரு படத்தில் நடிக்க அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் எனக்கும் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டேன். அதற்கு அந்த தயாரிப்பாளர் என்னிடம் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டார். அப்போது எனக்கு வயது மிகவும் குறைவு என்பதால் எனக்கு இதைப்பற்றி ஒன்னும் தெரியவில்லை. நான் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை சந்தித்தது அது தான் முதல் முறை” எனவும் நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை ரெஜினா தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல காமெடி நடிகர் சதிஷிற்கு ஜோடியாக ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எனும் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…