ms bhaskar [file image]
எம்.எஸ்.பாஸ்கர் : பார்க்கிங் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான இசைவெளியீட்டு விழா சென்னையில், நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவில் விதார்த், கனல் கண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ரவிக்குமார், செல்ல அய்யாவு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.பாஸ்கர் ” நான் சொல்ல வருவது ஒரே ஒரு விஷயம் தான் அது என்னவென்றால், நீங்கள் ஒரு படத்தை பார்க்கிறீர்கள் அந்த படம் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் அதனை 4 பேரிடம் சொல்லி மகிழுங்கள். அப்படி அந்த படம் பிடிக்கவில்லை என்றால் அதனை உங்களோடு வைத்து கொள்ளுங்கள். அதனை விட்டுவிட்டு படத்திற்கு போகும் அடுத்தவர்களை படம் மொக்கை போகவேண்டாம் என்று சொல்லாதீர்கள்.
இதனை நான் எதற்காக சொல்கிறேன் என்றால் ஒரு படத்தை எடுப்பதற்கு எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் எவ்வளவு பேர் கஷ்டபடுகிறார்கள் என்று அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். எவ்வளவோ பேர் படப்பிடிப்பில் ஏற்படும் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். ஒரு படத்தை எடுப்பதில் அந்த மாதிரி பல கஷ்டங்கள் இருக்கிறது. அந்த மாதிரி கஷ்ட்டப்பட்டு எடுக்கப்படும் படங்களை பார்த்துவிட்டு நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள்.
படம் பிடிக்கிறது என்றால் கொண்டாடுங்கள். படம் அப்படி பிடிக்கவே இல்லை என்றால் பேசாம இருந்து விடுங்கள். எல்லோரும் படத்தை பார்க்கட்டும். படம் பார்க்க செலவு செய்யும் 120 , 200 ரூபாயில் நாம் கோபுரம் கட்ட போறது இல்ல. ஆனால், நல்லா இருக்கும் படங்களுக்கும், நல்லா இல்லாத படங்களுக்கும் நீங்கள் வருகை தந்து பார்த்தால் பல குடும்பங்கள் வாழும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
நிறைய பேர் என்னிடம் சிறிய படங்கள் செய்கிறீர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களில் ஏன் நடிப்பது இல்லை என்று. நான் நடிக்க தயாராக தான் இருக்கிறேன். ஆனால், ஒண்ணே ஒன்னு சொல்லி கொள்ள விரும்புகிறேன். சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட ஈக்கு தலையாக இருக்க ஆசைப்படுகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்துள்ளது.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசிக்கத் தொடங்கினார். நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…