ms bhaskar [file image]
எம்.எஸ்.பாஸ்கர் : பார்க்கிங் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான இசைவெளியீட்டு விழா சென்னையில், நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவில் விதார்த், கனல் கண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ரவிக்குமார், செல்ல அய்யாவு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.பாஸ்கர் ” நான் சொல்ல வருவது ஒரே ஒரு விஷயம் தான் அது என்னவென்றால், நீங்கள் ஒரு படத்தை பார்க்கிறீர்கள் அந்த படம் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் அதனை 4 பேரிடம் சொல்லி மகிழுங்கள். அப்படி அந்த படம் பிடிக்கவில்லை என்றால் அதனை உங்களோடு வைத்து கொள்ளுங்கள். அதனை விட்டுவிட்டு படத்திற்கு போகும் அடுத்தவர்களை படம் மொக்கை போகவேண்டாம் என்று சொல்லாதீர்கள்.
இதனை நான் எதற்காக சொல்கிறேன் என்றால் ஒரு படத்தை எடுப்பதற்கு எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் எவ்வளவு பேர் கஷ்டபடுகிறார்கள் என்று அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். எவ்வளவோ பேர் படப்பிடிப்பில் ஏற்படும் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். ஒரு படத்தை எடுப்பதில் அந்த மாதிரி பல கஷ்டங்கள் இருக்கிறது. அந்த மாதிரி கஷ்ட்டப்பட்டு எடுக்கப்படும் படங்களை பார்த்துவிட்டு நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள்.
படம் பிடிக்கிறது என்றால் கொண்டாடுங்கள். படம் அப்படி பிடிக்கவே இல்லை என்றால் பேசாம இருந்து விடுங்கள். எல்லோரும் படத்தை பார்க்கட்டும். படம் பார்க்க செலவு செய்யும் 120 , 200 ரூபாயில் நாம் கோபுரம் கட்ட போறது இல்ல. ஆனால், நல்லா இருக்கும் படங்களுக்கும், நல்லா இல்லாத படங்களுக்கும் நீங்கள் வருகை தந்து பார்த்தால் பல குடும்பங்கள் வாழும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
நிறைய பேர் என்னிடம் சிறிய படங்கள் செய்கிறீர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களில் ஏன் நடிப்பது இல்லை என்று. நான் நடிக்க தயாராக தான் இருக்கிறேன். ஆனால், ஒண்ணே ஒன்னு சொல்லி கொள்ள விரும்புகிறேன். சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட ஈக்கு தலையாக இருக்க ஆசைப்படுகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…