இந்த செய்தியை எத்தனை பேர் பார்த்தீர்கள்! இயக்குனர் சேரன் ட்வீட்!

Default Image

விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட இயக்குனர் சேரன்.

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் சினிமாவில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘இந்த செய்தியை எத்தனை பேர் பார்த்தீர்கள். இங்கே ஏழைகளும், சுயதொழில் அடுத்து என்ன என்ற கேள்வியோடு பெரும்பாலான மக்கள் பரிதவிக்கும் நிலையில், இவர்களுக்கு எப்படி கடன் தள்ளுபடி.’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்