தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அருண் மாதேஷ் வரன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டார்கள்.
இந்த நிலையில், நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் ஒருவர் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபரை தாக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வடசென்னை 2 நிச்சியம் வரும்! நடிகர் தனுஷ் பேச்சு!
இது குறித்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா ” அந்த கூட்டத்தில், ஒரு பையன் என்னை தொந்தரவு செய்தான். நான் உடனடியாக அவரை எதிர்கொண்டு எதுக்காக இப்படி செய்தீர்கள் என்று பேசினேன். பிறகு அவர் ஓடினார். நான் அவரை விடாமல் பின் தொடர்ந்து தாக்கினேன். ஒரு பெண்ணின் உடலை தொடுவதற்கு துணிவு அவருக்கு இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார்.
இதைப்போலவே, மன்சூர் அலிகான் நடித்த சரக்கு படத்தின் ப்ரோமோஷனின் போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த கூல் சுரேஷ் தொகுப்பாளினி ஐஸ்வர்யா கழுத்தில் மாலை போட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…