தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் பல பெரிய பட்ஜெட் படங்களை உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயிண்ட் மூவிஸ்” நிறுவனம் தான் வாங்கி தமிழக தியேட்டர் உரிமைகளைக் கைப்பற்றியுள்ளனர். அதன்படி, குலுகுலு,கோப்ரா, லால்சிங் சத்தா, திருச்சிற்றம்பலம், வெந்து தணிந்தது காடு, சர்தார், ‘கேப்டன்’ ஆகிய படங்களை இவர்களது பேனரில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 15- வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விழா ஒன்று நடைபெற்றது. அதில் நடிகர் கமல்ஹாசன், அமீர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, இந்த விழாவில் ஒரு முக்கியமான அறிவிப்பும் வெளியிடபட்டுள்ளது. அது என்னவென்றால், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கமல்ஹாசன் மேடையில் அறிவித்துள்ள்ளார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் ட்வீட்டர் பக்கத்தில் “15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…
தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…
சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…
கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…