இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. வசூல் ரீதியாகவும் படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.
படத்தில் நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதுவரை வடிவேலு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், மாமன்னன் படத்தில் எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். வடிவேலுவின் வேறுபரிமாணத்தை மாரிசெல்வராஜ் படத்தின் மூலம் காமித்தார் என்றே கூறலாம்.
மீண்டும் பழைய பார்முலாவை கையில் எடுத்த நடிகை அனுஷ்கா! தரமான கம்பேக் லோடிங்…
படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரமும் பேசப்பட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதலில் அந்த மாமன்னன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது வடிவேலு இல்லையாம். வடிவேலுவுக்கு முன்பே வேறொரு ஹீரோ தான் நடிக்க இருந்தாராம். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை ஆரம்ப காலத்தில் இருந்தே காமெடி வேடங்களில் நடித்து கலக்கி வரும் சார்லி தான் .
முதலில் மாமன்னன் படத்தில் நடிக்க அவரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தததாம். பிறகு சில காரணங்களால் சார்லியால் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். பிறகு படத்தின் கதையை மாரிசெல்வராஜ் வடிவேலுவிடம் கூறி சம்மதம் வாங்கினாராம். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் வடிவேலு மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்து அருமையாக தான் இருந்தது. அதைப்போலவே சார்லியும் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…