kajal aggarwal [File Image]
சென்னை : கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி நடிகை காஜல் அகர்வால் பேசியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்த பிறகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். இருப்பினும், ஆரம்ப காலத்தை போல பெரிய அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே சொல்லலாம். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் காஜல் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் கலந்து கொண்டபோது தான் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நிறையவே இருக்கிறது.
அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஒரு முறை ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நான் கேரவனில் இருந்தேன். அப்போது திடீரென அந்த படத்தில் உதவி இய்குணராக பணியாற்றிய ஒருவர் கேரவணுக்குள் அனுமதி கூட இல்லாமல் நுழைந்தார். நான் அவர் உள்ளே வந்ததை பார்த்ததும் ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டேன்.
பிறகு சட்டையை கழட்டி விட்டு அவருடைய நெஞ்சில் என்னுடைய பெயரை பச்சை குத்தியதை காமித்தார். இருப்பினும், யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே நுழைந்து அவர் சட்டையை கழட்டியது எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. பிறகு அந்த உதவி இயக்குனரிடம் நீங்கள் உங்களுடைய அன்பை வெளிப்படுத்த இப்படி செய்தீர்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
ஆனால், இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடாதீர்கள் என்று அவரை எச்சரித்தேன். அவரும் கேட்டுக்கொண்டார்” எனவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரசிகராக இருந்தாலும் இப்படியா செய்வது என்பது போல விமர்சித்து பேசி வருகிறார்கள்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…