நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.
இந்த வாரத்திற்கான நாமினேஷன் சுற்று நேற்று நடைபெற்றது. நாமிநேஷனில், கவின் லொஸ்லியா, அபிராமி, முகன் மற்றும் மதுமிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், லொஸ்லியா மட்டும் தான் ஷெரீனை நாமினேட் செய்துள்ளார்.
இதற்கான காரணத்தை லொஸ்லியா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஷெரீனை, சாக்ஷி பயன்படுத்தினார் என்ற காரணத்தினால் தான், அவரை நாமினேட் செய்ததாக கூறியுள்ளார். அவராக கூறியிருந்தால் பரவாயில்லை, அதை இன்னொருவர் மூலமாக சொல்ல வைத்தது சரி இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், சாக்ஷியிடன் தர்சன் சொன்ன விடயங்கள் எதுவும் ஷெரீனுக்கு தெரியாது. என்ன நடந்தது என்பதை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதனையடுத்து, நாட்கள் செல்லச்செல்ல தான் லொஸ்லியாவின் உண்மை முகம் தெரிய வருகிறதாக நெட்டிசன்கள்கூறுகின்றனர். இதுவரை லொஸ்லியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தவர்கள், தற்போது அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…
சென்னை : இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…