pradeep antony harish kalyan [File Image]
பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோடி கணக்கான இதயங்களை வென்றுள்ளவர் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசியதால் விளையாட்டு என்று வரும் போது தான் ஒரு கடுமையான போட்டியாளர் என்பதனை காட்டும் வகையிலும், விளையாடினார். ஆனால், இவர் மீது குற்றச்சாட்டி எழுந்த காரணத்தால் பிக் பாஸ் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது.
இதற்கு முன்னாடி நடந்த சீசன்களில் எல்லாம் இப்படி நடந்தது கூட இல்லை. ஆனால் பிரதீப் ஆண்டனி விவகாரத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து அவர் செய்த தவறுகளை திருத்திவிட்டு அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் அப்படி செய்யாமல் அவருக்கு ரெட் கார்டு கொடுத்தது மிகவும் தவறு என பலரும் கூறி வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஹரிஷ் கல்யாண் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பிரதீப் தான் பிக் பாஸ் வின்னர் என்பது போல பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எதாவது பண்ணுவது தான். ரசிகர்கள் விரும்பும் எதாவது விஷயத்தை செய்தால் அந்த போட்டியாளரை மக்களுக்கு பிடிக்கும்.
ஒரே படத்தில் இணையும் சிம்பு- தனுஷ்? ரொம்ப பயங்கரமான சர்ப்ரைஸா இருக்கே!
உள்ளே சண்டை போட்டுக்கொண்டாலும் வெளியே யாரை பிடித்திருகிறது என்ற விஷயம் ஒன்று இருக்கிறது. அதில் பிரதீப் ஆண்டனி நிறைய ரசிகர்களை பெற்று கொண்டதாக நான் நினைக்கிறன். அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தாலும் அவருக்கான வரவேற்பு அவருக்கு சரியாக கிடைத்திருக்கிறது. ஏனென்றால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் படங்களை இயக்குவது தான் தனக்கு ஆசை என்று கூறியிருந்தார்.
எனவே, அவர் வைத்திருக்கும் அந்த கதைக்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டது என்றால் அவர் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றியடைந்துவிடுவார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக ஹரிஷ் கல்யாண் பேசியுள்ளார்.
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…