இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து இருவரும் 6-வது முறையாக இணைவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பதாகவும், படத்திற்கு அருவா என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிறகு ஹரி அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கினார். இந்த படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஹரி, அருண் விஜய், பிரியா பவானி சங்கர்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ” அதில் ஒருவர் அருவா படத்தின் கதைதானா யானை திரைப்படத்தின் கதை என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஹரி ” அருவா படத்தின் கதை வேற யானை படத்தின் கதை வேற “அருவா” இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதை வேண்டுமென்றால் எடுத்துவிடலாம்” என கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…